Thursday, May 03, 2018

Don Ashok - Ashok.R


Source:
Don Ashok - Ashok.R
https://ift.tt/2rif6oo
மஞ்சள் பையும், கையில் கொஞ்சம் பணமும் வைத்துக்கொண்டு கவுன்சிலிங்கின் போது பதற்றத்துடன் அலையும் கருத்த தோல் அப்பாக்களை நான் பார்த்திருக்கிறேன். ஒரு தலைமுறையாக படித்து நல்ல வேலைக்கு போய்விட்ட எங்கள் அப்பாக்களே, "எது எங்கே இருக்கும்? எங்கே எதைப் படித்தால் நல்லது?" எனத் தடுமாறுவார்கள் எனும்போது, தன் மகன்/மகளை முதல்தலைமுறை பட்டதாரியாக்க அலையும் இவர்களின் நிலை இன்னமும் மோசம். எங்கள் அப்பாக்களுக்கு எதுவுமே தெரியாது என்றால், அந்த மாணவர்களின் அப்பாக்களுக்கு சுத்தமாக எதுவுமே தெரியாது. எல்லாவற்றுக்கும், "சார் சார்.." என்றோ, "தம்பி தம்பி," என்றோ யாரின் பின்னாடியாவது போய் உதவி கேட்டபடியே நாள்முழுதும் தவிப்பார்கள். இத்தனைக்கும் கவுன்சிலிங்க் எல்லாம் தமிழ்நாட்டுக்குள்தான். மிஞ்சிப்போனால் சென்னை. அதற்கே இந்தப் பாடு படுவார்கள். இந்த அப்பாவிகளைத்தான் ராஜஸ்தான் போன்ற இந்தி தவிர எதையுமே அறியாத எருமைமாடுகள் வாழும், வளர்ச்சியே அடையாத பாழடைந்த, வன்புணர்வுப் புகழ், மதவாதப்புகழ், மாநிலங்களுக்குப் போய் நீட் தேர்வெழுதுங்கள் என மத்திய அரசும் உச்சநீதிமன்றமும் அனுப்புகிறது. இந்த சாடிசத்தை ஆதரிக்கும் கூட்டம் இன்னொரு கூட்டம். அத்திம்பேர், மாமி, மாமா வழிகாட்டுதலுடன், "இந்த டிபார்ட்மெண்ட் இந்தக் கல்லூரியில் படித்தால் இந்த வேலை கிடைக்கும்," என கூகிள் மேப் போட்டதைப் போல சகல வழிகாட்டுதல்களுடன் வாழ்க்கையை வசதியாக அணுகும் மேம்பட்ட சமூகம். பல நூறு ஆண்டுகளாய் கல்விக்கும், பெஞ்ச் தேய்க்கும் வேலைக்கும் பழக்கப்பட்டுவிட்ட அந்தச் சமூகத்தில் எப்போதும் எவனாவது எங்காயாவது இருப்பான். தங்கவோ, திங்கவோ அவர்களுக்கு பிரச்சினை இல்லை. லட்சம் லட்சமாக கொடுத்து கோச்சிங் சென்டர் போன தெம்பிலும், இரவு தங்கி, காலையில் தின்ற தெம்பிலும் ஜம் என தேர்வெழுதுவார்கள். ஆனால், கூட்டமில்லாமல் போகும் LSS பஸ்ஸில் போகாமல் சாதா பஸ்ஸில் போனால் 2ரூ மிச்சம் பிடிக்கலாம் என கால்கடுக்க காத்திருந்து பயணிக்கும் எங்கள் மஞ்சள்பை அப்பாகளும், அவர்களின் அப்பாவிக் குழந்தைகளும் எங்கே போவார்கள்? காலண்டர் ஆணியில் பையை மாட்டிவிட்டு பக்கத்து கலைக்கல்லூரிக்கோ, அப்பன் தொழிலுக்கோ பிள்ளையை அனுப்புவார்கள். மொத்தத்தில் இந்த பணக்கார நாய்களும், உயர்சாதி நாய்களும் தலைமுறை தலைமுறையாக படித்து டாக்டர் ஆகவேண்டும். எங்கள் பிள்ளைகள் டாக்டர் ஆகிவிடக் கூடாது. அதானடா உங்களுக்கு வேணும்? அதுக்குத்தானடா இவ்வளவு சைக்கோத்தனமும், சாடிசமும்? ரத்தவெறி பிடித்த மிருகங்கள்கூட ஒருநொடியில் தன் இரையைக் கடித்து கொன்றுவிடுகிறது. ஆனால் பாஜகவும், அதன் கால் நக்கும் அதிமுகவும், தமிழக நடுத்தர/ஏழை, பிற்படுத்தப்பட்ட/தலித் மாணவர்களுக்கு வாழ்நாள் முழுமைக்கும் கனவுகளைத் தொலைத்த மரண வலியைத் தந்திருக்கிறார்கள். ஆனால் நிலைமை இப்படியே நீடிக்காது. காலம் மாறும். எங்களின் சம உரிமைக்காக மட்டுமே நியாயமாகப் போராடிய எங்களை பழிவெறி மிக்க சாடிஸ்டுகளாக மாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். பாஜகவும் சரி, இதை ஆதரிக்கும் பார்ப்பனர்களும் சரி, ஈபிஎஸ்/ஓபிஎஸ்சும் சரி, நீட் தேர்வுக்கு ஜால்ரா அடிக்கும் விஷமிகளும் சரி... ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள். கோபத்தையும், வெறியையும் தேக்கி வைத்துக் காத்திருக்கிறோம். காலம் வரும். தக்க பதில் சொல்வோம். -அசோக்.R (டான் அசோக்)

No comments:

Madurai Time zone

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...