Saturday, November 07, 2015
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்
Source:
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்
http://ift.tt/1Pg8Kxp
உலகில் முதலாவது பிளாஸ்டிக் தார் வீதிகள் இந்தியாவில்... மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி இயற்பியல் பேராசிரியர் வாசுதேவன் பிளாஸ்டிக் தார் மூலம் வீதி அமைக்கும் புதிய முறை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார். இப்புதிய திட்டத்தை ஏற்றுக்கொண்டு இந்திய மத்திய அரசு அங்கீகாரம் வழங்யுள்ளதுடன் வர்த்தமாணியிலும் வெளியிட்டுள்ளது. மறு பயன்பாட்டிற்கு பயன்படாத பாலித்தீன் கவர்கள், பிஸ்கட், சாக்லேட் கவர்கள், தெர்மாகோல் போன்றவற்றை மீண்டும் பயன்படுத்தவும், பூமி வெப்பமடைவதை தடுக்கவும், மதுரை தியாகராஜர் இன்ஜி., கல்லூரி பேராசிரியர் வாசுதேவன் 2001ல் ஆராய்ச்சி மேற்கொண்டார். இவற்றை பயன்படுத்தி பிளாஸ்டிக் வீதி அமைக்கவும் முடிவு செய்தார். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிளாஸ்டிக் கழிவுகளை எரிக்காமல் இவற்றை ஜல்லிகளில் கலந்து “பிளாஸ்டிக் கோட்டிங்’ கொடுத்து அவற்றுடன் தார் சேர்த்து பிளாஸ்டிக் வீதிகள் அமைக்கவும் ஆய்வு செய்தார். உலகில் முதன்முறையாக இவரது கண்டுபிடிப்பான பிளாஸ்டிக் தார் வீதி கோவில்பட்டியில் 2002ல் போடப்பட்டது. இந்த பிளாஸ்டிக் சாலைக்கு அதிக பலம் இருப்பதாகவும், சாலை போடுவதற்கு அதிக தண்ணீர் தேவைப்படாது என்றும், மழைக் காலங்களில் இந்தச் சாலையில் தண்ணீர் தேங்காது என்றும் பேராசிரியர் வாசுதேவன் கூறினார். சாதாரண ரோட்டை காட்டிலும், ஐந்து ஆண்டுகள் கூடுதலாக உழைக்கும். மழைநீர் ஊடுருவி சாலைகள் பாதிப்படைவதில்லை. தேய்மானம் மிக குறைவு. பராமரிப்பு செலவுகள் கிடையாது. தார் பயன்பாடு 10 சதவீதம் குறைவு. ஒரு கி.மீ.,க்கு 50 ஆயிரம்வரை செலவு மிச்சம். கார்பன்டை ஆக்ஸைடால் ஏற்படும் மாசு தவிர்க்கப்படும். தட்பவெட்ப நிலை சீராகும். பிளாஸ்டிக்கை பிரித்துவிடுவதால், குப்பையிலிருந்து உரம் தயாரிப்பது எளிது. இந்தியா முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி ரோடு அமைத்தால், பிளாஸ்டிக்கால் இவ்வுலகிற்கு ஏற்பட்டுவரும் ஆபத்தை நீக்கலாம். பிளாஸ்டிக் ரோடு அமைக்க விரும்புவோர் 0452 248 2240 அல்லது 94864 86728 ல் தொடர்பு கொள்ளலாம். நம்மால் தவிர்க்கமுடியாத அடிமையாக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவினை பயனுள்ள வகையில் பிளாஸ்டிக் தார்ச்சாலை போட கண்டுபிடித்த முனைவர். வாசுதேவன் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி பேராசிரியர் அவர்களை நாமும் வாழ்த்துவோம் நன்றி - தினமலர் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும் http://ift.tt/1XVBuNm "யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர். சுதந்திரமாக வாழ்வதற்குரிய ஒரே தகுதி இது தான்." "பசித்தவனுக்கு மீன்களைக் கொடுத்து உதவுவதைக் காட்டிலும், எப்படி மீன் பிடிப்பது என்பதை கற்றுக் கொடுத்தால், வாழ்க்கையில் முன்னேறுவான்" “பணம் இருந்தால் உன்னையே உனக்கு தெரியாது சேவை குணம் இல்லாவிட்டால் உன்னை யாருக்கும் தெரியாது” மனிதர்கள் நான்கு வகைப்பட்டவர்கள் என்று சொல்லப்படுகிறது: தனக்குத் தெரியாது என்பது தெரியாதவர்கள் – இவர்கள் முட்டாள்கள். இவர்களை விட்டுவிடுங்கள். தனக்குத் தெரியாது என்பது தெரிந்தவர்கள் – இவர்கள் எளிமையானவர்கள். சொல்லிக்கொடுங்கள். தனக்குத் தெரியும் என்பது தெரியாதவர்கள் – இவர்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். எழுப்புங்கள். தனக்குத் தெரியும் என்பது தெரிந்தவர்கள் – இவர்களே ஞானிகள். பின்பற்றுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment